search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிவுடைநம்பி
    X
    அறிவுடைநம்பி

    ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் விஷம் குடித்து உதவி பேராசிரியர் தற்கொலை

    ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அறிவுடைநம்பி (வயது 46). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடியிருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வைத்து திடீரென அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், அறிவுடை நம்பியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பழனியில் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து கடந்த 25 தினங்களுக்கு முன்பு தான் இங்கு மாறுதலாகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×