search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாத்தூர், மண்டையூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    மாத்தூர், மண்டையூரில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூர் கடைவீதியில் மளிகை கடை வைத்திருக்கும் சந்தானம் (வயது 52) மற்றும் மாத்தூர் ரெயில்வேகேட் அருகே மளிகை கடை வைத்திருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாண்டித்துரை (43) ஆகிய இருவரும் தங்களது பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்டையூரில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (52) என்பவர் புகையிலை பொருட்களை விற்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×