search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.டி.ஓ. சாலையில் சுற்றித்திரியும் நாய்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்.டி.ஓ. சாலையில் சுற்றித்திரியும் நாய்களை படத்தில் காணலாம்.

    வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அவதி

    வேலூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள், அண்ணாசாலை, நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, ஆர்.டி.ஓ. சாலை போன்ற இடங்களில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவைகள், சாலையில் செல்வோரை துரத்தி, துரத்தி கடிக்கிறது. இரவு நேரங்களில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோரை விரட்டுவதால் விபத்துக்குள்ளாகின்றனர்.

    காலை வேளையில் நடைபயிற்சி செல்லும் போது ஒருவித அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    முக்கிய சாலைகளில் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மாநகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×