என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓடையில் தக்காளியை கொட்டும் விவசாயிகள்
Byமாலை மலர்29 Nov 2020 8:47 AM GMT (Updated: 29 Nov 2020 8:47 AM GMT)
வரத்து அதிகரிப்பால் விலை கிடைக்காததால், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, கொத்தயம், தேவத்தூர், விராகிரிகோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதகமான பருவநிலை நிலவியதால் சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகமானது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
கடந்த மாதம் வரை 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ.100 முதல் ரூ.120 வரையே விலை கிடைக்கிறது. கட்டுப்படியான விலை கிடைக்காததால், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் தாலுகா சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, கொத்தயம், தேவத்தூர், விராகிரிகோட்டை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சாதகமான பருவநிலை நிலவியதால் சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்தது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகமானது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
கடந்த மாதம் வரை 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ.100 முதல் ரூ.120 வரையே விலை கிடைக்கிறது. கட்டுப்படியான விலை கிடைக்காததால், சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் தக்காளியை கொட்டிச்செல்லும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X