search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    திமுக பிரச்சாரத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அமைச்சர் உதயகுமார்

    தி.மு.க. விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
    மதுரை: 

    மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நிவர் புயல் தாக்கம் ஏற்படுத்திய போது இயற்கையை கையாள்வதில் முதல்வர் பழனிசாமி புதிய சாதனை படைத்துள்ளார். அரசு எடுத்த நடவடிக்கையால் நிவர் புயலால் பெரும்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 

    நிவர் புயலுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும். 

    தி.மு.க. விண்வெளியில் சென்று பிரச்சாரம் செய்தாலும் மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள்.

    மதுரையில் ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டிசம்பர் 4-ந்தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×