search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

    தேன்கனிகோட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகே உள்ள ஜவளகிரி பகுதியில் தளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவளகிரி கிராமத்தை சேர்ந்த சீனிவாஷ் (வயது 34), சீத்தாராம் (39) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×