என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்28 Nov 2020 1:36 AM GMT (Updated: 28 Nov 2020 1:36 AM GMT)
கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
வீரபாண்டி:
கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் கொடுவாய் மாகாளியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்தவர் குமரேசன் (வயது 49). இவர் இதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருமண விழாவிற்கு தாராபுரம் சென்றுள்ளார்.
திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று மதியம்வீட்டுக்கு திரும்பி வந்த போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த டி.வி, குளிர்சாதனப்பெட்டி மற்றும் வெள்ளிக்கொலுசு, வெள்ளிகுடம், வெள்ளிக்குத்துவிளக்குகள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து குமரேசன் அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார், அருகில் இருப்பவர்களிடமும் மற்றும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் புகுந்து ரூ.2லட்சம் பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X