search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற 100 பேர் கைது
    X
    தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற 100 பேர் கைது

    போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற 100 பேர் கைது

    புதுக்கோட்டையில் போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை;

    தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் பசுபதிபாண்டியன் கூட்டமைப்பு சார்பில் பட்டியலினத்தவரை தேவேந்திர குல வேளாளராக அறிவிக்க கோரி புதுக்கோட்டையில் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவரை வெளியே விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்ய ஏராளமான போலீசார் நேற்று காலை அந்த ஓட்டல் முன்பு குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஓட்டல் முன்பு அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் கொடியுடன் திரண்டனர். போலீசாரின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு செல்ல முயன்ற பார்வதி சண்முகசாமியிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன்? என அவர் கேள்வி எழுப்பினர். இருப்பினும் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் கூறினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டு சென்ற அவரையும், அமைப்பு நிர்வாகிகளையும் ஓட்டல் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×