என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் ஒரு வாரத்துக்கு முன்பு வேனில் கடத்தல்: 2 கால்களை துண்டித்து டிரைவர் படுகொலை
Byமாலை மலர்22 Nov 2020 2:08 PM GMT (Updated: 22 Nov 2020 2:08 PM GMT)
கடலூரில் ஒரு வாரத்துக்கு முன்பு வேனில் கடத்தப்பட்ட டிரைவர் 2 கால்களை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர்;
கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் அருள்மொழி. இவருடைய மகன் வினோத்குமார்(வயது 27). இவர் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் வினோத்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அவரை, 5 பேர் கொண்ட கும்பல் வேனில் கடத்தி சென்றது. இதுபற்றி அவரது தந்தை அருள்மொழி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனில் கடத்திச் செல்லப்பட்ட வினோத்குமாரையும், அவரை கடத்திச் சென்ற 5 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அடுத்த ராமாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், தலை சிதைந்த படியும் இருந்தது. மேலும் அந்த உடலின் அருகில் அடையாள அட்டை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார், அடையாள அட்டையை பார்த்த போது, அதில் வினோத்குமார், செம்மண்டலம், கடலூர் மாவட்டம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து ராமாபுரம் போலீசார், கடலூர் புதுநகர் போலீசாரை தொடர்பு கொண்டு கடலூரில் யாராவது காணாமல் போனதாக புகார் வந்துள்ளதா? என விசாரித்தனர். அப்போது செம்மண்டலத்தை சேர்ந்த வினோத்குமார் காணாமல் போனதாக புகார் வந்தது பற்றி தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் ஆந்திரா மாநிலத்தில் இறந்து கிடந்தது வினோத்குமார் தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து ராமாபுரம் போலீசார் நேற்று கடலூர் வந்து, புதுநகர் போலீசார் உதவியுடன், வினோத்குமாரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உடலை அடையாளம் காட்டுவதற்காக, அவர்களை ஆந்திர மாநிலத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மேலும் வினோத்குமாரை வேனில் கடத்தி சென்று ஆந்திராவில் வைத்து கால்களை துண்டித்து கொன்றார்களா? அல்லது கொலை செய்து அவரது உடலை ஆந்திராவில் வீசிச்சென்றார்களா? என்பது குறித்தும், அவரது கொலைக் கான காரணம் என்ன? என்பது குறித்தும் ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை கடத்தி கொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூரில் வேனில் கடத்தப்பட்ட டிரைவரை கொன்று உடல் ஆந்திராவில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X