என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கொடைக்கானல்
Byமாலை மலர்22 Nov 2020 2:14 AM GMT (Updated: 22 Nov 2020 2:14 AM GMT)
வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
கொடைக்கானல்:
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் அவர்கள் வந்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால், அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது கேமரா, செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பில்லர் ராக், பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். இதற்கிடையே ஏரிச்சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் கொடைக்கானல் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் அவர்கள் வந்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால், அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது கேமரா, செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பில்லர் ராக், பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். இதற்கிடையே ஏரிச்சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் கொடைக்கானல் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X