search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலி

    கன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    கன்னியகோவில் அடுத்த புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி தாமரைவள்ளி (வயது70). இவர் நேற்று காலை கடலூர் பாண்டி ரோட்டை கடக்கும் போது பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி தாமரை வள்ளி பரிதாபமாக இறந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மகன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×