என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை- ரெயில்வே ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை
Byமாலை மலர்21 Nov 2020 2:52 AM GMT (Updated: 21 Nov 2020 2:52 AM GMT)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ரெயில்வே ஊழியருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 2016-ம் வருடம் 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் உத்தரபிரதேச மாநிலம் சாத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் (வயது22) என்பவர் தங்கி ரெயில்வேயில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தார்.
விபின் குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுதொடர்பாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி விபின் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ராஜகுமாரி ஆஜரானார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட விபின்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 2016-ம் வருடம் 17 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் உத்தரபிரதேச மாநிலம் சாத்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் (வயது22) என்பவர் தங்கி ரெயில்வேயில் கேட் கீப்பராக பணிபுரிந்து வந்தார்.
விபின் குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுதொடர்பாக மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி விபின் குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ராஜகுமாரி ஆஜரானார்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப்பட்ட விபின்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X