என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுமாப்பிள்ளை தற்கொலை- திருமணமான 20 நாளில் சோகம்
Byமாலை மலர்20 Nov 2020 9:04 AM GMT (Updated: 20 Nov 2020 9:04 AM GMT)
வில்லியனூர் அருகே திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவரும் மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த கவிதா(22) என்ற பெண்ணும் கடந்த 20 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் புதுமண தம்பதி உறவினர் தியாகராஜன் வீட்டில் வசித்து வந்தனர். அவர்களை தனிக்குடித்தனம் செல்லுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தினர். ஆனால் இதில் கிருஷ்ணமூர்த்திக்கு விருப்பமில்லை.
இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்து ஏற்கனவே புதுமண தம்பதிக்காக கரிக்கலாம்பாக்கம் - மடுகரை சாலையில் பிடித்து இருந்த வாடகை வீட்டில் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவரும் மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த கவிதா(22) என்ற பெண்ணும் கடந்த 20 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் புதுமண தம்பதி உறவினர் தியாகராஜன் வீட்டில் வசித்து வந்தனர். அவர்களை தனிக்குடித்தனம் செல்லுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தினர். ஆனால் இதில் கிருஷ்ணமூர்த்திக்கு விருப்பமில்லை.
இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்து ஏற்கனவே புதுமண தம்பதிக்காக கரிக்கலாம்பாக்கம் - மடுகரை சாலையில் பிடித்து இருந்த வாடகை வீட்டில் பார்த்த போது கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X