என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளி மரணம் - தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
Byமாலை மலர்19 Nov 2020 8:55 AM GMT (Updated: 19 Nov 2020 8:55 AM GMT)
மதுராந்தகம் அருகே தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு உறவினர்கள போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:
விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன் (வயது 31). இவர் மதுராந்தகத்தை அடுத்த வையாவூரில் உள்ள தனியார் மதுபான ஆலைக்கு அட்டை பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தார். அவரை ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி ஈஸ்வரி படாளம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டனின் உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இறந்த மணிகண்டனுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X