என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை
Byமாலை மலர்19 Nov 2020 8:46 AM GMT (Updated: 19 Nov 2020 8:46 AM GMT)
புதுவையில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் நாராயணன் என்ற விஜய் (வயது 22). தச்சு தொழிலாளி. இவரும் கடலூரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகள் புதுவையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபிநயாவை அவரது பெற்றோர் சீர் கொடுத்து அழைத்து சென்றுவிட்டனர்.
இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் தனது தாய் மாலாவை ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக நாராயணன் கூறியுள்ளார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மாலா கொடுத்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X