search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் உமா மகேஸ்வரி
    X
    கலெக்டர் உமா மகேஸ்வரி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியீட்ட கலெக்டர்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 ஆகும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 48 ஆயிரத்து 773 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 61 ஆயிரத்து 231 பெண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 68 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 2020-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (14.2.2020-ன் படி) மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 498 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தின் போது 1, 531 ஆண் வாக்காளர்கள், 1, 590 பெண் வாக்காளர்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 3, 122 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தத்தின்போது 4 ஆயிரத்து 440 ஆண் வாக்காளர்கள், 4 ஆயிரத்து 90 பெண் வாக்காளர்கள் மற்றும் 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 552 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,547 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 85 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 843 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 928 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன.

    மேலும் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2021-ன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்கேற்ப வருகிற 21, 22-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 12, 13-ந் தேதிகளிலும் சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். 2021-ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், வருவாய் கோட்டாட்சியர்கள் தண்டாயுதபாணி, டெய்சிக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்) சங்கர், அ.தி.மு.க. நிர்வாகி அப்துல் ரகுமான், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், காங்கிரஸ் நகர தலைவர் இப்ராகிம் பாபு உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×