என் மலர்
செய்திகள்

உயிரிழப்பு
கொடுமுடிகாவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழப்பு
கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி இறந்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.
முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.
முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






