என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    செங்கல்பட்டு அருகே பெயிண்டர் தற்கொலை

    செங்கல்பட்டு அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஜெய்பீம்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). பெயிண்டர். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×