என் மலர்
செய்திகள்

அபராதம்
ஜெயங்கொண்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா?, சமூக இடைவெளி கடைபிடிக்கின்றனரா? வணிக நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றுகிறார்களா? என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.1,200-ம், சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு ஒரு கடைக்கு ரூ.500 வீதம் 7 கடைகளுக்கு ரூ.3,500-ம் என மொத்தம் ரூ.4,700 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
Next Story






