என் மலர்
செய்திகள்

விசைத்தறி
தீபாவளி பண்டிகையையொட்டி 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை
தீபாவளி பண்டிகையையொட்டி 40 ஆயிரம் விசைத்தறிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலார் மற்றும் சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறிகளில் பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி விசைத்தறி கூடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி நீண்டநாள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அதன்படி 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்படையும். இதேபோல் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் விலையில்லா வேட்டி -சேலைகள் உற்பத்தி பாதிக்கப்படும். எனினும் விசைத்தறி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டுவதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து வருகிற 23-ந் தேதி மீண்டும் விசைத்தறிகள் செயல்படும்’ என்றார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சோலார் மற்றும் சித்தோடு, விஜயமங்கலம், சிவகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறிகளில் பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி-சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி விசைத்தறி கூடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘தர்மபுரி, திண்டுக்கல், நெல்லை, மதுரை, புதுக்கோட்டை மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி நீண்டநாள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அதன்படி 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையால் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்படையும். இதேபோல் நாள் ஒன்றுக்கு 21 ஆயிரம் விலையில்லா வேட்டி -சேலைகள் உற்பத்தி பாதிக்கப்படும். எனினும் விசைத்தறி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டுவதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து வருகிற 23-ந் தேதி மீண்டும் விசைத்தறிகள் செயல்படும்’ என்றார்கள்.
Next Story






