என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 4 வயது சிறுவன் பலி

    காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மோனிஷன்(வயது 4). இவன், தனது தாயார் தாமரையுடன், நேற்று செட்டிகாரன்கொட்டாய் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றான். அப்போது அந்த வழியே வந்தமோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாமரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே சிறுவன் பலியானான். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மோனிஷன்(வயது 4). இவன், தனது தாயார் தாமரையுடன், நேற்று செட்டிகாரன்கொட்டாய் பகுதியில் சாலையோரம் நடந்து சென்றான். அப்போது அந்த வழியே வந்தமோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தாமரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே சிறுவன் பலியானான். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×