என் மலர்
செய்திகள்

வீடு புகுந்து கொள்ளை
அஞ்செட்டி அருகே தொழிலாளி வீட்டில் நகை திருடியவர் கைது
அஞ்செட்டி அருகே தொழிலாளி வீட்டில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி தாலுகா உரிகம் அருகே உள்ள கோவுஅள்ளியைச் சேர்ந்தவர் சூடப்பா (வயது 55). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து சூடப்பா அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி விசாரணை நடத்தினார். இதில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி (35) என்பவர், சூடப்பா வீட்டில் நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






