என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை

    வேளாங்கண்ணி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே கிராமத்துமேடு ஈவேரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் விஜயராகவன் (வயது 26). விவசாய கூலிதொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் மனமுடைந்த விஜயராகவன் கடந்த மாதம் 21-ந் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராகவன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×