என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

    திருவண்ணாமலை அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் ரஞ்சித்குமார். இவர் திருவண்ணாமலையை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரஞ்சித்குமாரின் தாய் உள்பட 7 பேர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பாலியல் பலாத்காரம் செய்த ரஞ்சித்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×