என் மலர்
செய்திகள்

தற்கொலை
ராயக்கோட்டை அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
ராயக்கோட்டை அருகே கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள ஏரி சின்னகவுண்டனஅள்ளியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). கட்டிட மேஸ்திரி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நவீன்குமாரின் தாய் பென்னியம்மாள் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றார். மாலை வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார்.
அப்போது நவீன்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அவரது தாய் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






