என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்விரோதத்தில் பட்டதாரி பெண் மீது தாக்குதல்- பக்கத்து வீட்டு பெண் கைது
Byமாலை மலர்7 Nov 2020 9:31 AM GMT (Updated: 7 Nov 2020 9:31 AM GMT)
நாகை அருகே முன்விரோத தகராறில் பட்டதாரி பெண்ணை தாக்கிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் பனைமேடு காலனி தெருவில் வசித்து வருபவர் சாகுல்அமீது. இவரது மகள் தாரணி(வயது20). இவர் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சித்ரா(42). இவர்கள் இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்க தாரணி, சித்ரா ஆகியோர் சென்றனர். அப்போது சித்ரா, தாரணியை திட்டினார்.
பின்னர் தாரணி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது சித்ரா மீண்டும் திட்டியதுடன் தாரணியை தலையில் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தாரணி மண்எண்ணெய்யை எடுத்து குடித்துள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தாரணியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X