என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கடலூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
கடலூரில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று பழைய மணிக்கூண்டு, ரெயில்வே மேம்பாலம் ஆகிய இடங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மார்க்கெட் காலனியை சேர்ந்த காட்டுராஜா மகன் ராஜமுத்து (வயது 25), ராமு மகன் பிரசாந்த் (24) ஆகிய 2 பேரும் கஞ்சா வைத்து விற்பனை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 10 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






