என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந்தேதி கடைசி நாள்: கலெக்டர் தகவல்
Byமாலை மலர்4 Nov 2020 9:27 AM GMT (Updated: 4 Nov 2020 9:27 AM GMT)
நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 30-ந்தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
எதிர்பாராத இயற்கை பேரிடா்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுகட்டி நிதியுதவி வழங்குவதன் மூலம், விவசாயிகள் தொடா்ந்து வேளாண்மையில் நிலை நிறுத்துவதற்காக பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.831 கோடி விவசாயிகளுக்கு பெற்று வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த மாவட்டத்தில் நடப்பு பருவத்தின் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவராவர்.
மேலும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் வங்கிகளில் பயிர்கடன் பெறும் விவசாயிகள், அவரவா் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும், விருப்பமில்லை எனில் காப்பீடு பதிவிலிருந்து விலக்கு பெறுவதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு படிவத்தை கடன் பெறும் வங்கிகளிலேயே சமா்ப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பயிர்காப்பீடு பதிவிற்கென வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிர்காப்பீட்டு அடங்கல் சான்றினை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று, அரசால் மானியத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு 324 ரூபாய் 31 பைசா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொது சேவை மையங்களில் வருகிற 30-ந்தேதி வரை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும்போது அடங்கல், ஆதார், காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
காப்பீடு பதிவு செய்யப்படும் வங்கி அல்லது பொது சேவை மையங்களில் அடங்கலில் உள்ள வருவாய் கிராமங்கள், சாகுபடி பரப்பு விவரங்கள், வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்கள் காப்பீடு பதிவேற்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலினை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு பிரிமியம் செலுத்தி, பதிவு செய்ய வருகிற 30-ந் தேதிவரை காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், ஏதேனும் இயற்கை பேரிடா்கள் ஏற்படும் பட்சத்தில், காப்பீடு பதிவு கால அவகாசத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், விவசாயிகள் கடைசி நேர கூட்ட நெரிசலால் காப்பீடு பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு, காப்பீடு கட்டணம் செலுத்த இறுதி நாள்வரை காத்திருக்காமல், முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
எதிர்பாராத இயற்கை பேரிடா்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுகட்டி நிதியுதவி வழங்குவதன் மூலம், விவசாயிகள் தொடா்ந்து வேளாண்மையில் நிலை நிறுத்துவதற்காக பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.831 கோடி விவசாயிகளுக்கு பெற்று வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த மாவட்டத்தில் நடப்பு பருவத்தின் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவராவர்.
மேலும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் வங்கிகளில் பயிர்கடன் பெறும் விவசாயிகள், அவரவா் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும், விருப்பமில்லை எனில் காப்பீடு பதிவிலிருந்து விலக்கு பெறுவதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு படிவத்தை கடன் பெறும் வங்கிகளிலேயே சமா்ப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பயிர்காப்பீடு பதிவிற்கென வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிர்காப்பீட்டு அடங்கல் சான்றினை கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று, அரசால் மானியத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு 324 ரூபாய் 31 பைசா தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள், பொது சேவை மையங்களில் வருகிற 30-ந்தேதி வரை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யும்போது அடங்கல், ஆதார், காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும்.
காப்பீடு பதிவு செய்யப்படும் வங்கி அல்லது பொது சேவை மையங்களில் அடங்கலில் உள்ள வருவாய் கிராமங்கள், சாகுபடி பரப்பு விவரங்கள், வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்கள் காப்பீடு பதிவேற்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலினை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு பிரிமியம் செலுத்தி, பதிவு செய்ய வருகிற 30-ந் தேதிவரை காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், ஏதேனும் இயற்கை பேரிடா்கள் ஏற்படும் பட்சத்தில், காப்பீடு பதிவு கால அவகாசத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், விவசாயிகள் கடைசி நேர கூட்ட நெரிசலால் காப்பீடு பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு, காப்பீடு கட்டணம் செலுத்த இறுதி நாள்வரை காத்திருக்காமல், முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X