என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்2 Nov 2020 3:58 AM GMT (Updated: 2 Nov 2020 3:58 AM GMT)
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நகர்ப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? என்றும், பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளி பின்பற்றாத மற்றும் முககவசம் அணியாத கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதமும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் 15 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத், பீட்டர், காளமுத்து மற்றும் குழுவினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X