search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பவானி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    பவானி அருகே உடல் நலம் சரியில்லாமல் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பவானி:

    பவானி அருகே உள்ள சங்கரன்கவுண்டன்பாளையம் அஞ்சுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 41). இவருடைய மனைவி மேகலா (38). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மணி காயம் அடைந்தார். பின்னர் அதில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல் நலம் சரியாகவில்லை. 

    இதில் மணி மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×