search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அன்னவாசல் அருகே மணல் கடத்தல் - லாரி பறிமுதல்

    அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி தலைமையிலான போலீசார் மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிரைவர் ஓலைமான்பட்டியை சேர்ந்த சேர்ந்த கருப்பையா (வயது 28), லாரி உரிமையாளர் இலுப்பூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து டிரைவர் கருப்பையாயை கைது செய்தனர்.

    Next Story
    ×