என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவோணம் அருகே நாட்டு வெடி தயாரித்த 2 பேர் கைது
Byமாலை மலர்31 Oct 2020 10:31 AM GMT (Updated: 31 Oct 2020 10:31 AM GMT)
திருவோணம் அருகே நாட்டு வெடி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த, நெய்வேலி தென்பாதியை சேர்ந்த செல்வம் (வயது48) , நெய்வேலி வடபாதியை சேர்ந்த முனியன்(58) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சம்சுகுப்தா, சர்புதீன் ஆகிய இருவரும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வெடிகள் மற்றும் வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X