என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படப்பை அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் கொலை - 3 பேர் கைது
Byமாலை மலர்31 Oct 2020 10:03 AM GMT (Updated: 31 Oct 2020 10:03 AM GMT)
படப்பை அருகே 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை கலைஞர் நகர் 4-வது தெரு, ஆதனஞ்சேரியை சேர்ந்தவர் பத்மினி (வயது 55). இவரது மகன் செந்தில் என்ற செந்தில்குமார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பத்மினி கடந்த 28-ந்தேதி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் செந்தில்குமாரின் மனைவி மேனகாவுக்கு சென்னை சிட்லப்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (40) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி ராஜேஷ்கண்ணா, மாயமான செந்தில்குமாரின் தாயார் பத்மினியை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றார். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், செந்தில்குமாரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள மேனகாவின் தந்தை அருணை (66) பிடித்து விசாரித்தனர்.
அப்போது தனது மருமகன் செந்தில்குமாரின் சொத்து முழுவதையும் அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தனது மகள் மேனகாவின் கள்ளக்காதலன் ராஜேஷ்கண்ணா மற்றும் தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (42), சவுட்டூர் பகுதியை சேர்ந்த காசிநாதன் (70) ஆகியோருடன் சேர்ந்து செந்தில்குமாரை தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், ஆலம்பூண்டி கிராமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு அழைத்து சென்று கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்து அங்கேயே புதைத்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அருண், ஹரிகிருஷ்ணன், காசிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X