search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர் கைது

    பண்ருட்டி அருகே வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் ராஜாராம்(வயது 34). இவருடைய மனைவி அனிதா(29). இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜாராம், வேறொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜாராமும், அவரது தாய் ராஜேஸ்வரியும் சேர்ந்து அனிதாவிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். மேலும் வரதட்சணை கொடுக்காத அனிதாவை இருவரும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து அனிதா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனஜா வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தார்.மேலும் தலைமறைவான ராஜேஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    Next Story
    ×