search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    காவேரிப்பட்டணம் அருகே மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டணம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பேடரஅள்ளியைச் சேர்ந்தவர் சின்னவன் (வயது 50). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியுடன் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சின்னவனின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சின்னவன் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த சின்னவன், நாகரசம்பட்டி அருகே உள்ள செலசனம்பட்டியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×