என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரணாம்பட்டு அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்30 Oct 2020 11:49 AM GMT (Updated: 30 Oct 2020 11:49 AM GMT)
பேரணாம்பட்டு அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி சோதனை சாவடியில் வேலூர் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில், பேரணாம்பட்டில் இருந்து பெங்களூருக்கு 95 மூட்டைகளில் 4 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பேரணாம்பட்டு டவுன் எல்.ஆர்.நகரை சேர்ந்த இர்பான் (வயது 25), தரைக்காடு பகுதியைச் சேர்ந்த முபாரக் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லாரி உரிமையாளர் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி மேட்டைச் சேர்ந்த ரஹீம் பாஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X