என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு: அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு
Byமாலை மலர்30 Oct 2020 8:51 AM GMT (Updated: 30 Oct 2020 8:51 AM GMT)
சிவகங்கைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கைக்கு வருகிற நவம்பர் மாதம் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார். இதையொட்டி அவருக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் கதர் கிராமதொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். இளைஞர்அணி துணை செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கைக்கு வருகிற 3-ந்தேதி அல்லது 4-ந்தேதி வருகை தர உள்ளார். அவருக்கு தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற பெயரை பெற்று தரும் வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வழக்கமான முறையில் வரவேற்பு என்று இருக்காமல் மாவட்டத்தின் பெருமைகளை கூறும் வகையில் கிராமமக்களுடன் இணைந்து வரவேற்க வேண்டும். மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், புகழ் ஆகியவைகள் தெரியும் வகையில் வரவேற்பு இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- சிவகங்கை வருகை தரும் முதல்- அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தரவேண்டும். அவர் வரும் வழியில் அதிக அளவில் மக்கள் வரவேற்பு தரும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் கிராமத்து மக்களை வைத்து முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். முதல்-அமைச்சர் தான் ஒரு விவசாயி என்பதை அடிக்கடி கூறுவார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவார். எனவே அவரது வரவேற்பில் விவசாயிகளின் பங்கு அதிகஅளவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், முன்னாள் மாவட்டசெயலாளர் முருகானந்தம், மாணவர்அணி மாவட்டசெயலாளர் என்.எம்.ராஜா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஆவின் தலைவர் அசோகன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகங்கை நகர் அவை தலைவர் வி.ஆர். பாண்டி நன்றி கூறினார்.
சிவகங்கைக்கு வருகிற நவம்பர் மாதம் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார். இதையொட்டி அவருக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் கதர் கிராமதொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். இளைஞர்அணி துணை செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கைக்கு வருகிற 3-ந்தேதி அல்லது 4-ந்தேதி வருகை தர உள்ளார். அவருக்கு தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற பெயரை பெற்று தரும் வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வழக்கமான முறையில் வரவேற்பு என்று இருக்காமல் மாவட்டத்தின் பெருமைகளை கூறும் வகையில் கிராமமக்களுடன் இணைந்து வரவேற்க வேண்டும். மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், புகழ் ஆகியவைகள் தெரியும் வகையில் வரவேற்பு இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- சிவகங்கை வருகை தரும் முதல்- அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தரவேண்டும். அவர் வரும் வழியில் அதிக அளவில் மக்கள் வரவேற்பு தரும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் கிராமத்து மக்களை வைத்து முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். முதல்-அமைச்சர் தான் ஒரு விவசாயி என்பதை அடிக்கடி கூறுவார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவார். எனவே அவரது வரவேற்பில் விவசாயிகளின் பங்கு அதிகஅளவில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், முன்னாள் மாவட்டசெயலாளர் முருகானந்தம், மாணவர்அணி மாவட்டசெயலாளர் என்.எம்.ராஜா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஆவின் தலைவர் அசோகன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகங்கை நகர் அவை தலைவர் வி.ஆர். பாண்டி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X