search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சென்னையில் 688 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

    தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 516 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
    சென்னை

    தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 3,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,79,377 ஆக அதிகரித்துள்ளது. 

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 9-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. 

    தமிழகத்தில் இன்று மட்டும் 72,433 கொரோனா மாதிரிகளும், இதுவரை 97,32,863 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 26,356 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 12
    செங்கல்பட்டு - 150
    சென்னை - 688
    கோவை - 218
    கடலூர் - 35
    தர்மபுரி - 24
    திண்டுக்கல் - 8
    ஈரோடு - 155
    கள்ளக்குறிச்சி - 20
    காஞ்சிபுரம் - 86
    கன்னியாகுமரி - 38
    கரூர் - 21
    கிருஷ்ணகிரி - 27
    மதுரை - 51
    நாகை - 41
    நாமக்கல் - 52
    நீலகிரி - 30
    பெரம்பலூர் - 4
    புதுக்கோட்டை - 32
    ராமநாதபுரம் - 10
    ராணிப்பேட்டை - 28
    சேலம் - 147
    சிவகங்கை - 17
    தென்காசி - 6
    தஞ்சாவூர் - 51
    தேனி - 18
    திருப்பத்தூர் - 34
    திருவள்ளூர் - 138
    திருவண்ணாமலை - 21
    திருவாரூர் - 34
    தூத்துக்குடி - 31
    திருநெல்வேலி - 2
    திருப்பூர் - 96
    திருச்சி - 48
    வேலூர் - 72
    விழுப்புரம் - 33
    விருதுநகர் - 19
    Next Story
    ×