search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    தேசூர் அருகே விபத்தில் மின்ஊழியர் பலி

    தேசூர் அருகே விபத்தில் மின்ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    தேசூரை அடுத்த கெங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன் (வயது 40), மின்ஊழியர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துக்கொண்டு மோட்டர் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    தென்திண்ணலூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது, செந்தாமரைகண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசீருதீன் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×