என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மங்களமேடு அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
Byமாலை மலர்27 Oct 2020 4:27 AM GMT (Updated: 27 Oct 2020 4:27 AM GMT)
மங்களமேடு அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்தவர் சரிதா(வயது 31). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆட்டோவில் வந்தார்.
நேற்று முன்தினம் அவர் ஆட்டோவில் அவரது உறவினரான புவனேஸ்வரி(40), நவீன்(20) ஆகியோரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். வாலிகண்டபுரம் கருப்பசாமி கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சரிதா மற்றும் நவீன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X