search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூக்கள் விற்பனை
    X
    பூக்கள் விற்பனை

    ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜைக்கு ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை

    ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை ஆனது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை யொட்டி பூக்கள் அதிகளவில் விற்பனையானது. இதில் குண்டு மல்லி கிலோ- ரூ.800-க்கும், முல்லை கிலோ- ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ - ரூ.300-க்கும் அரலி - ரூ.170 முதல் 200,கனகாபரம்- ரூ. 800 முதல் ஆயிரம் வரையும், ரோஜா கிலோ ரூ.300 முதல் 500 வரையும் ஜாதி மல்லி கிலோ ரூ.360 க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்று உள்ளன. கடந்த ஆண்டை விட பூக்கள் குறைவாக தான் விற்றுள்ளது.

    இதே போல் ஆயுத பூஜையை யொட்டி வாழைப்பழம், ஆப்பிள், மாதுளம் ,ஆரஞ்சு, கொய்யா என மாவட்டம் முழுவதும் 50 டன் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் 25 டன்னுக்கு மட்டுமே ஆதாவது ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே பழங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீம் வியாபாரம் குறைவாக நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×