என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Byமாலை மலர்26 Oct 2020 12:14 PM GMT (Updated: 26 Oct 2020 12:14 PM GMT)
கண்ணமங்கலம் அருகே பணத் தகராறில் பெண்ணை கொலை செய்த தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 65). இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கணேசன் (35) என்பவர் பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்கும்படி, ராஜேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரியை அடித்துக்கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து, நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நகைகளை மீட்டனர். கணேசன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் ஜெயிலில் உள்ள கணேசனிடம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X