search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    மருந்து கடை அதிபர் வீட்டில் நகை கொள்ளை- போலீசார் விசாரணை

    சிதம்பரம் அருகே மருந்து கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50). இவர் சிதம்பரம் அருகே முட்லூர் பகுதியில் மருந்துகடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜையையொட்டி குடும்பத்துடன் சிவபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம மனிதர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    நேற்று மாலை கல்யாணராமன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை பார்த்து பதறிபோனார்.

    இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் கல்யாணராமன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கைரேகை நிபுணர்களும் ரேகையை பதிவு செய்து கொள்ளையர்களை பற்றி துப்புதுலக்கி வருகின்றனர்.

    Next Story
    ×