search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளத்தை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அதிகாரி
    X
    குளத்தை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அதிகாரி

    குளத்தை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்த அதிகாரி

    ஜெயங்கொண்டம் ஒன்றியம் இளையபெருமாள் நல்லூர் ஊராட்சியில் உள்ள வடக்கு குளத்தை ஆழப்படுத்தும் பணியை அதிகாரி ஆய்வு செய்தார்.
    மீன்சுருட்டி:

    ஜெயங்கொண்டம் ஒன்றியம் இளையபெருமாள் நல்லூர் ஊராட்சியில் உள்ள வடக்கு குளம், அரியலூர் மாவட்ட கலெக்டரின் அறிவுரையை ஏற்று அந்த ஊராட்சியில் உள்ள இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பினர் உதவியுடன் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அருளப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார். இந்த குளத்தினை ஆழப்படுத்தி, அதில் இருந்த மண்ணை எடுத்து கரைகளை பலப்படுத்தியுள்ளனர்.
    Next Story
    ×