search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெய்வேலி அருகே கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

    நெய்வேலி அருகே கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுக வேலன்(வயது 46). இவர் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே ஆவின்பால் நிலையமும் டீக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கடையில் இருந்தபோது கடைக்கு வந்த 3 பேர், ஆறுமுகவேலனிடம் கத்தியை காட்டி ஆயிரம் ரூபாய் கொடு இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகவேலன் திருடன், திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    இதற்கிடையே இதுபற்றி அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வடக்கு மேலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கலை என்கிற கலைச்செல்வன்(27), வடக்கு மேலூரை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் கமல் என்கிற கமலக்கண்ணன்(38), நெய்வேலி 28-வது வட்டத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் குமார்(39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×