என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்காலில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்- தொழிலாளி பலி
Byமாலை மலர்24 Oct 2020 9:25 AM GMT (Updated: 24 Oct 2020 9:25 AM GMT)
காரைக்கால் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கொல்லத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது42). தொழிலாளியான இவர், தனது உறவினர் உமாசங்கருடன் (35) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பிள்ளைத்தெருவாசலில் சென்ற போது, சாலையின் நடுவே திடீரென வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் நகர போக்குவரத்து போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். உமாசங்கர் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X