என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்23 Oct 2020 10:24 AM GMT (Updated: 23 Oct 2020 10:24 AM GMT)
வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
வாலாஜாபாத் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 39) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கார்த்திக் குமார் தனது மனைவியுடன் உடல் நலம் சரியில்லாத உறவினரை பார்க்க சென்னைக்கு சென்றார்.
ஆஸ்பத்தியில் இருந்த உறவினரை பார்த்துவிட்டு சென்னையிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து கார்த்திக் குமார் வாலாஜாபாத் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு வந்து பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் வீட்டில் நுழைவது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X