search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    அரியலூர் அருகே சாலை விபத்தில் டீ மாஸ்டர் பலி

    அரியலூர் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பட்டகாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). டீ மாஸ்டரான இவர் கடந்த 17-ந் தேதி வழக்கம்போல் டீக்கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். 

    ஒரத்தூர் பிரிவு பாதை அருகே வி.கைகாட்டி-விக்கிரமங்கலம் சாலையில் காயவைத்த தானியம் மீது போர்த்தப்பட்டிருந்த படுதா மீது சென்றதில் முருகானந்தம் ஓட்டிச்சென்ற மொபட் வழுக்கி விழுந்ததில் முருகானந்தம் கீழே விழுந்து படுகாயமடைந்தார். 

    இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முருகானந்தம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். 

    இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×