என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
    X
    அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் கோவில் கட்டும் பணி - அமைச்சர் ஓஎஸ் மணியன் அடிக்கல் நாட்டினார்

    வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் கோவில் கட்டும் பணிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டினார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது வேதாமிர்த ஏரி. அதிக மழை காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் இந்த ஏரிக்கு வந்தடைந்து நிரம்புகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், புனித நீராடவும் பயன்படும் இந்த ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழன் காலத்தில் வெட்டப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி முழுமையாக தூர்வாரப்பட்டு வருகிறது. தமிழக அரசு ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் நகராட்சி மூலம் சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்கள் நடைபயிற்சிக்கும், பொழுதுபோக்கு பூங்காக்களும் அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யம் காசிவிஸ்வநாதர் கோவிலின் எதிரே உள்ள ஏரிக்குள் சிவன்-பார்வதி கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் நாகை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பையன், தீலிபன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், வக்கீல்கள் தங்க கதிரவன், நமசிவாயம், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் சுரேஷ்பாபு, குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×