என் மலர்
செய்திகள்

தக்காளி
ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை குறைந்தது
ஈரோடு மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென குறைந்தது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் காய்கறிகள் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காய் விலை உயர்ந்தால் இன்னொரு காய் விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் சிரமம் அடைந்து வருகிறார்கள். காய்கள் வாங்கும் பொதுமக்களும் நிலையான விலையில் பொருட்களை வாங்க முடியாமல் சிரமம் அடைகிறார்கள்.
கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை உயர்ந்து வந்தது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.100, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 என்ற விலையில் விற்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று தக்காளி விலை திடீர் என குறைந்தது. நேற்று ஈரோடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது.
Next Story






